30 9
இலங்கைசெய்திகள்

சிறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ்

Share

சிறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ்

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இருவரும் தற்போது பணித் துறைக்கு அனுப்பப்படும் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 8 மணியளவில் இரு பிரிவுகளில் இருந்து இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் இருவரும் பிற்பகல் 3.30 மணி வரை வேலைப் பிரிவில் பணிபுரிவார்கள் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவில் சிறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தை துடைத்து சுத்தம் செய்யவும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி ஆகியோரை சிறைச்சாலையில் வைத்து வைத்தியர் ஒருவர் பரிசோதித்துள்ளார்.

இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வற் வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் செலுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...