2 20
இலங்கைசெய்திகள்

மீண்டும் ரணிலை கேட்கப்போகும் மக்கள் : முன்னாள் எம்.பி எதிர்வு கூறல்

Share

மீண்டும் ரணிலை கேட்கப்போகும் மக்கள் : முன்னாள் எம்.பி எதிர்வு கூறல்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மக்கள் மீண்டும் ரணிலை (ranil wickremesinghe)கேட்கப்போகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senarathne) தெரிவித்துள்ளார்.

நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணி கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளுக்குள் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. “ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன.

சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்

எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.

ராஜித சேனாரத்ன கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் வகையில் அவர் பக்கம் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...