2 15
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் 3 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் 3 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் TJ ஞானவேல்.

இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த திரைப்படம் ஜெய் பீம். சமூக நீதி குறித்து பேசிய இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக ஞானவேல் கைகோர்த்த நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருந்தது.

கடந்த 10ஆம் தேதி வெளிவந்த வேட்டையன் படத்திற்கு சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 3 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ. 57 கோடி வசூல் செய்துள்ளது.

இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை அசால்டாக கடந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...