7 15
இலங்கைசெய்திகள்

அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்

Share

அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்

முன்னாள் அமைச்சர், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் பொன்சேகா, அக்கட்சியை விட்டும் விலகி, தனித்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

அதன் காரணமாக அவருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியில் இடமளிக்கப்படவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியிலும் சரத் பொன்சேகாவை இணைத்துக் கொள்ள எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

இதனையடுத்து சரத் பொன்சேகா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, அரசியல் செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் கடந்த ஜனாதிபதித் ​தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவளிக்காத எவரையும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, தங்களுடன் இணைத்துக் கொள்ளவோ தயாரில்லை என்று அநுர தரப்பு மிக கடுமையான முறையில் சரத் பொன்சேகாவுக்குப் பதிலளித்துள்ளது.

அதனையடுத்து சரத் பொன்சேகாவும் இம்முறை பொதுத் தேர்தலில் ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றைப் பெற்றுக் கொள்ளல் அல்லது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...