5 18
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு 88 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

Share

ராஜபக்ச குடும்பத்தினருக்கு 88 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தது.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க வேட்புமனுக்களை கையளித்துள்ளார்.

1936 ஆம் ஆண்டில் டி.எம். ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளராக அரசியலை தொடங்கியிருந்தார்.

இதனையடுத்து டி.ஏ.ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச, ஜார்ஜ் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...