1 18
இலங்கைசெய்திகள்

அநுரவின் அடுத்த ஆட்டம் : குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்

Share

அநுரவின் அடுத்த ஆட்டம் : குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தமது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption)அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொத்துப் பிரகடனங்களை மீள சமர்ப்பிக்க வேண்டும் என புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது, ​​ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னதாக சபாநாயகரிடம் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனடிப்படையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்டபடி இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்திருந்தது.’

மேலும், கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு (Colombo) நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...