24 6708b2ed0465b
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் முதல் நாள் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் முதல் நாள் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

அதே போல் ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ள இயக்குனர் TJ ஞானவேல், தன்னுடைய இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரை எப்படி காட்டப்போகிறார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்டையன் படம் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் ரூ. 72 கோடி வசூல் செய்த வேட்டையன் தமிழ் நாட்டில் முதல் நாள் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...