7 9
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அடுத்த நகர்வு

Share

பொதுத் தேர்தல் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அடுத்த நகர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 8 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த மதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் பல நாடுகளை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...