29 3
இலங்கைசெய்திகள்

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

Share

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் சஷீ வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதியான சஷீ வீரவ்ங்ச சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தி்ல் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெகுலாவள, குறித்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உள்ளிட்ட சாட்சிகளுக்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...