21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய இருவர் : நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா..!

Share

நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய இருவர் : நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா..!

இலங்கையிலே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிப்பீடம் ஏறிய பின் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவால் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

அந்த அறிவித்தலின் பிரகாரம் செப்டெம்பர் 11ம் திகதி முதல் மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கு இவ்வாறான நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது அப்போதைய மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்தவர்களின் செயற்பாடுகளே காரணமாகும்.

குறிப்பாக கடந்த காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் அர்ஜுன மகேந்திரன் இருவரும் நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கியமானவர்களாக காணப்பட்டமையே இந்நடவடிக்கைக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டை நெருக்கடிக்குள் கொண்டு சென்றவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தற்போது கேள்விகள் முன்வைக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...