13 4
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்

Share

இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்

பெரிய மற்றும் நடுத்தர அளவிலான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில், இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பெரிய வரி செலுத்துவோர் மற்றும் நடுத்தர வணிகங்கள் என்பன, 2024 ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் 100 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளன.

இந்த தொகையை செலுத்த வேண்டியவர்கள் டிசம்பர் 25ஆம் திகதி வரை நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் தொகையை மீட்டெடுத்தால், திணைக்களத்தின் இந்த ஆண்டின் வருமான இலக்கான 2024 பில்லியன் ரூபாய்களை அடையமுடியும் சந்திரசேகர கூறியுள்ளார்.

இந்த காலக்கெடுவை நீடிக்க முடியாது என்றும், கடனை செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...