24 6700e75f6b274
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி

Share

ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறக்குதிக்கான பணத்தை மத்திய வங்கி ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, கார்கள், வான்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர், உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...