19 1
இலங்கைசெய்திகள்

வாக்குரிமைக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறும் ரஞ்சன் ராமநாயக்க

Share

வாக்குரிமைக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறும் ரஞ்சன் ராமநாயக்க

ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ், தனது வாக்குரிமைக்கான சாத்தியக்கூறுகளை தற்போது ஆராய்ந்து வருவதாக நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சேகரித்த தேவையான ஆவணங்களை, தமக்கு கிடைக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், சுகாதாரக் காப்புறுதி போன்ற பல நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிவில் உரிமைகளை ஆராய்ந்து வருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2021 ஜனவரியில், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இலங்கை உயர்நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், ரஞ்சனுக்கு அரசியல் நிபந்தனைகளின் அடிப்படைகளில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...