28 12
இலங்கைசெய்திகள்

புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க

Share

புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் எவ்வித துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் உண்டு எனவும், இந்த வாகனங்களை யார் பயன்படுத்தினார்? என்ன தேவைக்காக பயன்படுத்தினார் என்பது குறித்த ஆவணங்கள் உண்டு எனவும் அதனை பார்த்தால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகாரிகள் சட்ட ரீதியாகவும் சரியான நடவடிக்கையாகவும் இந்த வாகனங்களை ஒப்படைத்துள்ளனர் என சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை தரித்து நிறுத்த இடவசதி போதவில்லை என்பதனால் அரசாங்கத்திற்கு சொந்தமான வேறும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வாகனமும் காணாமல் போகவில்லை எனவும் தற்போதைய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது அந்த நிகழ்வில் பங்கு பற்றியதாகவும் அப்போது தமது அதிகாரபூர்வ வாகனத்தை ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...