7 37
இலங்கைசெய்திகள்

எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்

Share

எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்

நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் தற்போது இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சின் அதிகாரிகள் குழுவினருக்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்புக்களை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார, எதிர்வரும் வருடத்திற்கான எரிபொருள் கொள்வனவை திறம்பட திட்டமிடுமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன், இந்த முயற்சிகளை எளிதாக்குவதற்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும், 800 பிரிவேனாக்களுக்கு இந்திய உதவியின் மூலம் பெறப்பட்ட சோலார் பேனல்களை விநியோகிக்கும் திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி திஸாநாயக்க அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் படி, இம்முயற்சியை சுமுகமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமைச்சகத்திடம் இருந்து தெளிவான சாலை வரைபடம் தேவை என்றும் ஜனாதிபி அநுர குமார வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய வெளிநாட்டுக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு குழுவை நிறுவுவதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார், இந்த தீர்மானம் அவர்களின் செயல்பாட்டினை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டின் ஊடாக, வெளிநாட்டு உதவிகளால் ஆதரிக்கப்படும் திட்டங்களை மிகவும் திறமையாக செயல்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...