5 32
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

Share

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.

இதேவேளை அவர் ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் என்பதுடன், இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கோட்டாபய ராஜபக்ச பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...