4 31
இலங்கைசெய்திகள்

இணையும் ரணில் – சஜித்! நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி

Share

இணையும் ரணில் – சஜித்! நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டப்பட்ட கட்சி கூட்டத்திலேயே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுக்கவுள்ளனர்.

மேலும், இந்த தீர்மானம் இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு எதிராக கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...