7 28
இலங்கை

வாக்குச்சீட்டை கிழித்த மற்றுமொருவர் கைது

Share

வாக்குச்சீட்டை கிழித்த மற்றுமொருவர் கைது

கேகாலை (kegalle) வரக்காபொல பௌத்த கல்லூரியில் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை இரண்டாக கிழித்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இங்கு சந்தேக நபர் கிழிந்த வாக்குச் சீட்டின் ஒரு பகுதியை தனது காற்சட்டை பொக்கெட்டிலும் மீதியை வாக்குப்பெட்டியிலும் போட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் (Jaffna) – நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் வாக்குச் சீட்டை கிழித்ததை அடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார். தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...

19 9
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்திற்கு இந்தியாவிடம் கோரிக்கை: வேண்டுகோள் பரிசீலனை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய அண்டை நாடுகள் தங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக...

17 11
செய்திகள்இலங்கை

தாய்லாந்தில் இலங்கைப் பெண்களின் ஆன்மீகப் பயணம்: 10 விதிகளைக் கடைப்பிடிக்கும் சிறப்பு நிகழ்வு!

தாய்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத மற்றும் கலாச்சார நிகழ்வாக, பத்து விதிகளைத் (தச-சிலா) தற்காலிகமாகக் கடைப்பிடிப்பதற்காக...