7 26
உலகம்செய்திகள்

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

Share

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக, கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த ஆண்டில், அதாவது, 2025ஆம் ஆண்டில், 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...