14 17
இலங்கைசெய்திகள்

பிரசாரங்களின் போது பயன்படுத்தப்படும் முதலீட்டாளர்களின் பெயர்கள்: நாமலின் கோரிக்கை

Share

பிரசாரங்களின் போது பயன்படுத்தப்படும் முதலீட்டாளர்களின் பெயர்கள்: நாமலின் கோரிக்கை

இலங்கையின் முதலீட்டாளர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களைத் தமது தேர்தல் பிரசாரக் கோசங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய வேட்பாளர்களிடம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகள் கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் பரிமாறிக்கொண்டு தமது பிரசாரங்களை தொடரவேண்டும்.

இதன்போது, முதலீட்டாளர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெயர்கள் அல்லது தனிநபர்கள் மீது கவனம் செலுத்தாமல், மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, தேவையான டொலர்களை கொண்டு வரக்கூடிய, நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய மற்றும் சரியான முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, முதலீட்டாளர்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பது முக்கியமல்ல. மாறாக அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது முக்கியம் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...