27 9
இலங்கைசெய்திகள்

அநுர தரப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்காது

Share

அநுர தரப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்காது

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தரப்பு ஆட்சியை ஏற்றுக் கொண்டால் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படும் என சூழலியலாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய கொடியை மாற்றுவதற்கும் அனுர தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் தேசிய கொடியை மாற்றி பொருத்தமான வேறு கொடியை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுர தரப்பினர் வேறு எந்த ஒரு தலைவரும் செய்யாத வகையில் பௌத்தப்பிக்குகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்று செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...