27 9
இலங்கைசெய்திகள்

அநுர தரப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்காது

Share

அநுர தரப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்காது

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தரப்பு ஆட்சியை ஏற்றுக் கொண்டால் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படும் என சூழலியலாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய கொடியை மாற்றுவதற்கும் அனுர தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் தேசிய கொடியை மாற்றி பொருத்தமான வேறு கொடியை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுர தரப்பினர் வேறு எந்த ஒரு தலைவரும் செய்யாத வகையில் பௌத்தப்பிக்குகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்று செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....