32 4
சினிமாபொழுதுபோக்கு

நல்ல நபரை தேர்வு செய்ய வேண்டும்..விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன தெரியுமா?

Share

நல்ல நபரை தேர்வு செய்ய வேண்டும்..விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து தகவல் தான்.

சில மாதங்களாக இந்த ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல் பரவியது.

ஜெயம் ரவி இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து குறித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று இது குறித்து ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டார்.

ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்ததாகவும், இதுகுறித்து தன்னிடம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் இணையத்தில் ஒருமுறை பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அதில், எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கை இல்லை, நான் சரியான நபரை சந்திக்கும்வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்காக நான் காத்திருக்க தயாராக உள்ளேன்.

அவ்வாறு எனக்கு சரியான நபர் கிடைக்காமல் திருமணம் நடைபெறாமல் இருந்தால் கூட பரவா இல்லை அதை பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன்.

தவறான மனிதர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக அந்த பந்தத்தில் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன், அதனால் நான் சரியான நபர் வரும் வரை காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...

124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார்...