17 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

Share

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

தம்புள்ளை நகரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், துண்டுபிரசுரம் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முற்பட்டபோது பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

​பொலிஸார் வந்து இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதால், நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சர் மற்றும் குழுவினர் துண்டுபிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு குழுவினர் வந்து ஊ ஊ என கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால், சம்பவம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தம்புள்ளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,

“இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என இராஜாங்க அமைச்சரிடம் கூறினோம். அப்படி செய்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என அறிவித்தோம்.

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இதுபோன்ற செயல்களை தற்போது அனுமதிக்க முடியாது. எனவே, இப்பணியை உடனடியாக நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இராஜாங்க அமைச்சர் வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் அமைதி நிலவியது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...