14 8
இலங்கைசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் அடித்துகொலை செய்யப்பட்ட மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு

Share

கூரிய ஆயுதத்தால் அடித்துகொலை செய்யப்பட்ட மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு

மிஹிந்தலை பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (07) மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கடந்த 06 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...