10 10
இலங்கைசெய்திகள்

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

Share

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கருத்துக்கணிப்புக்களை தேர்தல்கள் ஆணையகம் எதிர்க்கிறது இந்தநிலையில், ஹெலகுரு (Helakuru) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி (IHP) ஆகியவை கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலகுரு என்பது ஒரு பிரபலமான சிங்கள மொழி செயலியாகும். இந்த செயலியின் கணிப்பின்படி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 80வீத வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி, அநுரகுமாரவுக்கு 37 வீத வெற்றி கிடைக்கும் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு 36 வீத வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

இருப்பினும், கடைசி நிமிட அரசியல் மாற்றங்களைக் கணக்கிட இயலாமை காரணமாக இந்த கருத்துக்கணிப்புக்களை விமர்சகர்கள் நிராகரித்துள்ளனர்.

குறிப்பாக ஹெலகுரு செயலிக்கு 30ஆயிரம் பேர் தமது கருத்துக்களை கூறினாலும், அதில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹெலகுரு தங்கள் செயலியின் பயனர்களை நம்பியிருப்பதால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர் என்ற விடயமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்புகள், தேர்தலில் ஒரு செயற்கையான தலையீடு என்று தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...