8 11
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது.

தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார்.

இவர், 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கணித்தது முதல், தொடர்ச்சியாக அவர் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துவருகிறார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

13 காரணிகளின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கணிக்கும் ஆலன் கூறியுள்ளார்.

இம்முறை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் வெற்றிபெறுவார் என கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...