17 5
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று விமான போக்குவரத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பை மையமாக கொண்டு மதுபான வியாபாரம் செய்யும் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் மது போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் குறைந்த விலைக்கு பெற்று இலங்கை முழுவதும் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், அதியுயர் தரத்தை கொண்ட 99 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...