4 11
இலங்கைசெய்திகள்

சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில்

Share

சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“சஜித் பிரேமதாச மிக சிறப்பாக ஆங்கிலம் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். அவரின் ஆங்கிலப் புலமை குறித்து நாம் விவாதிக்கவில்லை.

சஜித் பிரேமதாச எவ்வளவு சிறப்பாக ஆங்கிலம் பேசுவார் என்றால் அவர் பாடம் நடத்திய வகுப்பிற்கு கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியரே வருகை தருவார்” என சாடியுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில்,

“விவசாயத் துறையை மேம்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் அதிகரிப்பதே எமது முதல் திட்டம் ஆகும்.

இரண்டாவதாக வரிச்சுமையை இலகுவாக்க வேண்டும். அதனையடுத்து பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றமடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும். அதனையடுத்து, அஸ்வெசும உரிமையை பாதுகாப்பது எங்களின் திட்டமாகும்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரம் விரிவடையும் போது நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். இதன்மூலம், வரிச்சுமையை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...