1 8
இலங்கைசெய்திகள்

அம்பலமாகிய ரணில் – அநுர ஒப்பந்தம்: பகிரங்கப்படுத்திய சஜித்

Share

அம்பலமாகிய ரணில் – அநுர ஒப்பந்தம்: பகிரங்கப்படுத்திய சஜித்

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பது இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் இன்று (05.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு அளிக்கும் வாக்கு திருடர்களின் அணியையே காப்பாற்றும். ரணில் தரப்புடன் அவர்களுக்கு ஒப்பந்தம் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

அவர்கள் ஏன் எங்களுக்கு இவ்வளவு தூரம் அஞ்சுகின்றனர்? அவர்களுக்கு நாம் இந்த நாட்டை முன்னேற்றி விடுவோம் என்ற பயம் உள்ளது.

நாம் இந்த நாட்டில் வீடுகளைக் கட்டுவோம் என்று அவர்களுக்கு பயம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்று அவர்களுக்கு பயம்.

இந்த நாட்டில் உள்ள 10,096 பாடசாலைகளையும் நாம் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம் என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது. இந்த நாட்டின் சுகாதார சேவையை கட்டியெழுப்புவோம் எனவும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் தான் ரணில் – அநுர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...