27 4
இலங்கைசெய்திகள்

எமது அரசாங்கம் அரசியலமைப்பை மீறாது : அநுரகுமார தெரிவிப்பு

Share

எமது அரசாங்கம் அரசியலமைப்பை மீறாது : அநுரகுமார தெரிவிப்பு

செப்டெம்பர் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டால், தமது கட்சி அரசியலமைப்பை மீறாது என்று கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியலமைப்பின்படி தமது கட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திவுலபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனினும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுப் பதவிகளையும் ஒன்றரை மாதங்களுக்கு பொறுப்பேற்று அரசாங்கத்தை நடத்தலாம்.

இதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையில் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி போன்ற நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23ஆம் திகதியே புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளை நியமிக்கவுள்ளதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....