17 4
இலங்கைசெய்திகள்

அநுர தரப்பு பிரபல இசைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

Share

அநுர தரப்பு பிரபல இசைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியினால் இலங்கையின் பிரபல இசைக்குழு ஒன்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கையின் முன்னணி இசைக் குழுக்களில் ஒன்றான மேரியன்ஸ் இசைக்குழுவிற்கு இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை விமர்சனம் செய்து பாடல் ஒன்று பாடியமை தொடர்பில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இசைக்குழு அதற்காக மன்னிப்பு கோரி மற்றுமொரு காணொளியை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இது ஓர் ஆரோக்கியமான நிலை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாகவும் இது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நகைச்சுவைக்காக இசைக்குழு ஒன்று வெளியிட்ட காணொளிக்கு அச்சுறுத்தல் விடுப்பது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் அனுரகுமார தரப்பினர் மட்டுமே எவரையும் விமர்சனம் செய்ய முடியும் என்ற நிலைமை ஆபத்தானது என மதுர விதானகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
screenshot 1767577499228 664x430 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக ஊடகங்களில் பரவும் பொலிஸ் வெளியீடு ஒரு போலிச் செய்தி: பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் அவசர எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதாகக் கூறி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்கள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு...

image 870x580 695fced3e49ec
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு காணி விடுவிப்பு மற்றும் ஒலுவில் துறைமுகம் குறித்து முக்கிய முடிவுகள்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Weather 1
செய்திகள்இலங்கை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: நாளை மாலை இலங்கை கடற்கரையைக் கடக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை...

images 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவனெல்லை கோர விபத்து: லொறியின் பிரேக் செயலிழந்ததே காரணம்! நேரடி சாட்சியம்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில்...