11 4
அரசியல்இலங்கைசெய்திகள்

சுமந்திரன்-சஜித் இடையில் நடந்த டீல் என்ன! மாவை பகிரங்கம்

Share

சுமந்திரன்-சஜித் இடையில் நடந்த டீல் என்ன! மாவை பகிரங்கம்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புது புது அறிவிப்புக்களும், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும், அடுத்த ஜனாதிபதிக்கான தமது ஆதரவு தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடுகளும் நாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவிப்பதாகவே அமைகின்றன.

இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்த பல வருடங்களுக்கான இலங்கையின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக அமையும் அதேவேளை தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கருதப்படும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களின் தீர்மானம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதில் முக்கியமாக பார்க்கப்படுவது ஒரு கட்சியின் தீர்மானம் அந்த கட்சியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்து.

தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கான மூல கர்த்தா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் என்பது பலர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு.

இந்நிலையில் சுமந்திரனின் நகர்வுகள் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு என அறிவித்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...