35
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஒரு வாக்காளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாகக் கண்டறியப்படுவார்களாயின் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள், தமது பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகையாக ரூபா 109 இனை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, குறித்த தொகையினை வேட்பாளர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் தமது பதவியை இழப்பதுடன் மூன்று ஆண்டுகளுக்கு குடியுரிமை உரிமைகளையும் இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு பற்றிய விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கைகள் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளில் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் காவல்துறையினரினடம் முறைப்பாடு செய்து, வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...