27 2
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

Share

நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

இலங்கையில் மீண்டும் கம் உதாவ திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் கம் உதாவ வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்டதாகவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்தத் திட்டத்தை முன்னெடுக்க தவறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீடுகள் இல்லாத, காணி இல்லாத அனைவருக்கும் கம் உதாவ வேலை திட்டத்தின் ஊடாக நலன்கள் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதி வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மிரிஹானா இல்ல முற்றுகை: 54 சந்தேக நபர்கள் அடையாளம் என உச்ச நீதிமன்றத்தில் தகவல்!

அரகாலய காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானா இல்லத்திற்கு அருகே நிகழ்ந்த வன்முறைச் சம்பவம்...

Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...