12 2
இலங்கைசெய்திகள்

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

Share

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகம் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு சிலர் அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கட்சி உறுப்பினர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இந்த நாசகார செயலை மக்கள் விடுதலை முன்னணியின் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஜே.வி.பியின் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் தமது கொள்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக மக்களை பயறுமுத்தி தமது இயலாமையை காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, மதவாச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...