உலகம்செய்திகள்

நான்கு நாள் வேலை வாரம்: பணியாளர் வெற்றிடங்களை நிவர்த்திக்க முயற்சிக்கும் ஜப்பான்

Share
25
Share

நான்கு நாள் வேலை வாரம்: பணியாளர் வெற்றிடங்களை நிவர்த்திக்க முயற்சிக்கும் ஜப்பான்

மிகவும் கடினமாக உழைக்கும் நாடான ஜப்பான், அதன் மக்களும் நிறுவனங்களும் நான்கு நாள் வேலை வாரங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் பணியாளர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய மொழியில், ஒருவர் இறக்கும் வரை உழைக்கும் ஒரு சொல்லும் அடங்கியுள்ளது.

எனினும் தற்போது 74 மில்லியன்களாக இருக்கும் ஜப்பானின் தொழிற்படை, 2065இல் 40வீதத்தால் குறைந்து 45 மில்லியன்களாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான் நாள் வேலை நாள் யோசனையை ஆமோதித்த பின்னர், ஜப்பானிய அரசாங்கம் 2021 இல் குறுகிய வேலை வாரத்திற்கு முதலில் ஆதரவை தெரிவித்தது.

எனினும், ஜப்பானில் உள்ள சுமார் 8 வீதமான நிறுவனங்கள், தமது ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கின்றன.

அதே நேரத்தில் 7 வீதமான நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக ஒரு நாள் விடுமுறையை வழங்குகின்றன என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு இலத்திரனியல் நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களில் பணியாற்றும் 63ஆயிரம் பணியாளர்களில், 150 பேர் மாத்திரமே நான்கு நாள் அட்டவணையை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

85 வீத தொழில் தருனர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்பது, குழந்தைகளை வளர்ப்பவர்கள், வயதான உறவினர்களைப் பராமரிப்பவர்கள், ஓய்வூதியத்தில் வாழும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நெகிழ்வுத்தன்மை அல்லது கூடுதல் வருமானம் தேடுவோரை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில், ஜப்பானிய அரசாங்கத்தின் அண்மைய வெள்ளை அறிக்கை ஒன்றில், நாட்டில் கடின உழைப்புக் காரணமாக மாரடைப்பு உட்பட ஒரு வருடத்திற்கு குறைந்தது 54 இறப்புகள் ஏற்படுகின்றன என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...