5
இலங்கைசெய்திகள்

12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு

Share

12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு

யுத்தம் முடிந்து 12 வருடங்களில் டொலரின் பெறுமதி 420 ரூபாய் வரை அதிகரித்தது துர்ப்பாக்கிய நிலைமையாகும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இலசமாக பகிர்ந்த அரிசியில் புழு இருப்பதாக ஜேவிபியினர் போலி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் போல் அன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதால் நாம் தானாக முன்வந்து ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்து 12 வருடங்களில் டொலரின் பெறுமதி 420 ரூபாய் வரை அதிகரித்தது துர்ப்பாக்கிய நிலைமையாகும்.

சஜித் பிரேமதாச காலி முகத்திடலுக்கு சென்ற போது மக்கள் அடித்து விரட்டினர். அனுர குமார திசாநாயக்கவும் கனவிலும் தன்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என்று சொன்னார்.

எனவே இவ்வாறனவர்களிடம் நாட்டை கையளித்து விட்டு அவர்களால் முடியாத தருணத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடி வந்தால் அவர் நாட்டை ஏற்றுகொள்ள கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

தேர்தலின் மூலம் மக்கள் வழங்கும் நாட்டை மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...