5 44
இலங்கைசெய்திகள்

ரணில் தோற்றால் நாட்டை விட்டே வெளியேறப்போகும் மக்கள் : அச்சமூட்டுகிறார் ராஜித

Share

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தோல்வியடைந்தால் பலர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க என்ற நபருக்காக அல்ல, நாட்டுக்காகவே மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் திறமை இருப்பதாகவும், வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த முறை மொட்டு எம்பிக்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை போன்று எதிர்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினால் இம்முறை மற்றவர்களின் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனை வழங்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...