3 46
இலங்கைசெய்திகள்

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி

Share

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி

ஜெனிவாவின் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது.

இதன்படி இலங்கை தொடர்பான விவாதம், செப்டெம்பர் 9 ஆம் திகதி, பேரவையின் 57 வது அமர்வின் ஆரம்ப நாளிலேயே இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆராய்வின் பின்னர் அறிக்கை மீது ஊடாடும் உரையாடல் நடத்தப்படவுள்ளது.

பேரவையின் 51-1 தீர்மானத்தின்படி, இலங்கை தொடர்பான தகவல்களை சேகரிக்கும் திறனை ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் உட்பட விடயங்களை ஆராயுமாறு மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

 

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...