34 9
இலங்கைசெய்திகள்

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்

Share

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்

தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி, (Narahenpita) இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.

அதன்போது வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் வண, வாந்துவே தம்மாவங்ச தேரர், பிரதி நீதிச் செயலாளர் வண, ஹால்பன்வில பாலித தேரர், கொழும்பு பிராந்திய சங்க சபையின் தலைவர் வண, சூரியவெவ ஹேமாநந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
15 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு இளைஞர்களுக்கும்,...

14 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுளள அரசாங்கம்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை...

13 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிக விலை கொண்ட புதிய வாகனங்களுக்கான கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அதிக விலையை கொண்டிருக்கின்ற போதும், இலங்கையில் தற்போது புதிய வாகனங்களுக்கான கேள்வி...

12 18
இலங்கைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு மோசடி குறித்து எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல...