5 43
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைகின்றாரா ஹிருணிகா!

Share

ரணிலுடன் இணைகின்றாரா ஹிருணிகா!

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொலைபேசி மூலம் ஹிருணிகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் விரைவில் அவர் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் தாம் ஒருபோதும் ரணிலுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான அரசியலில் ஈடுபடும் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் சஜித் பிரேமதாசவை விட்டு வேறு ஒருவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் முகத்தைக்கூட தாம் பார்க்க விரும்புவதில்லை எனவும் அதனால் அவர் செல்லும் நிகழ்வுகளைக் கூட தாம் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சஜித்தின் மனைவி ஜலனி பிரேமதாச ரணிலுக்கு ஆதரவளித்தாலும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஹிருணிகா கூறியதாக பிரபல ஊடகவியலாளரொருவர் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...