15 22
இலங்கைசெய்திகள்

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!

Share

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாரவில – குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் இத்தேபான – மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...