இலங்கைசெய்திகள்

இணையப்பதிவு முறை நீக்கம்: புதிய முறைமை குறித்து வெளியான தகவல்

Share
21 14
Share

இணையப்பதிவு முறை நீக்கம்: புதிய முறைமை குறித்து வெளியான தகவல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறைக்கமைய, குடிவரவுத் திணைக்களத்திற்கு வருகை தரும் வரிசையின் அடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 400 கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 250 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.ஷ

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இ – கடவுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை, பொதுமக்கள் தங்களுடைய தற்போதைய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 51 பிரதேச செயலகங்கள் ஊடாக இணையக்கடவுச்சீட்டு முறையை இலங்கை அறிமுகப்படுத்தியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையின் கீழ், மக்கள் மூன்று நாட்களுக்குள் 15,000 ரூபா மற்றும் 14 நாட்களுக்குள் 5,000க்கு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும், இணையக் கடவுச்சீட்டுக்கள் அமைப்பு பல சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் தோல்வியடைந்தது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...