21 13
இலங்கைசெய்திகள்

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

Share

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

இலங்கை கடற்படையினர், 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 333 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் 11 இந்தியர்களின் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கையின் கடற்படை உறுப்பினர் ஒருவரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் மரணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...