14 19
உலகம்செய்திகள்

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

Share

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் வந்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இருப்பினும், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு குடும்பங்களையும் பிரித்ததாகத் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்புக்குப் பின், இளவரசர் வில்லியம், தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக, ராபர்ட் லேசி (Robert Lacey) என்பவர் எழுதிய, Battle of the Brothers என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் தம்பி ஹரியை அழைத்த வில்லியம், மேகன், ராஜ குடும்பத்தின் மீது வெறுப்பு வைத்துள்ளதாகவும், ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கே திரும்பிவிட ஆரம்பம் முதலே அவர் திட்டம் வைத்திருக்கக்கூடும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

தன் மனைவியைக் குறித்து அண்ணன் வில்லியம் கூறியதைக் கேட்டு கோபத்தில் ஹரி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட, அதன் பிறகு வில்லியம் தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக ராபர்ட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...