24 66c995a3588c5
உலகம்

வெளிநாடொன்றில் கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரின் தலையில் அடித்த அரசியல்வாதியால் சர்ச்சை

Share

வெளிநாடொன்றில் கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரின் தலையில் அடித்த அரசியல்வாதியால் சர்ச்சை

கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரை தலையில் அடித்த அரசியல்வாதி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில்(thailand) நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாய்லாந்து நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் வெளியேறிசென்றார்.இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
images 7 4
செய்திகள்உலகம்

கனடாவை நோக்கிப் படையெடுக்கும் அமெரிக்கர்கள்: இடப்பெயர்வு செய்ய விரும்பும் நாடுகளில் கனடா முதலிடம்.

அமெரிக்கக் குடிமக்கள் 2026ஆம் ஆண்டில் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில்...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

volcanoafps1763296482 0 436x333 17633737102041559789513 3 0 231 436 crop 17633737757491145053552
உலகம்செய்திகள்

ஜப்பானில் சகுராஜிமா எரிமலை வெடிப்பு: 13 மாதங்களுக்குப் பிறகு நெருப்பு உமிழ்வு – விமான சேவைகள் இரத்து!

எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில், கடந்த 13 மாதங்களாக அமைதியாக இருந்த புகழ்பெற்ற...

images 1 7
உலகம்செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு,...