6 38
உலகம்செய்திகள்

ஜேர்மனில் வெகுவாக அதிகரித்துள்ள சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

Share

ஜேர்மனில் வெகுவாக அதிகரித்துள்ள சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

ஜேர்மனிக்குள் (Germany) சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் பெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2023ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 266,224 பேர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த எண்ணிக்கை, 2022ஐ விட 33.4 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் பெடரல் பொலிஸாரிடம் பிடிபட்டுவிட்டதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஜேர்மனிக்குள் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்குள்ளும், 380,200 பேர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக, ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோரக் கடற்படை முகவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...