35 3
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் : பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

Share

சேதமடைந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் : பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் இன்று (21) மழையினால் கெட்டுப்போய் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் மரக்கறிகளை பாதுகாக்க கூரை இல்லாததே இதற்குக் காரணம் என சுனில் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மஹாவலி எச் பிராந்தியத்தில் இருந்து நொச்சியாகம, ராஜாங்கனை, விளச்சிய, மெதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து பெருமளவான விவசாயிகள் இன்று (21ஆம் திகதி) தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்தனர்.

அந்த மரக்கறிகளை பாதுகாப்பாக வைக்க கூரை இல்லாத காரணத்தினால் வியாபாரிகள் மரக்கறிகளை வாங்குவதை தவிர்த்துள்ளனர்.

இதன்போது காலையில் இருந்து பெய்த மழையில் மரக்கறிகள் சேதமடைந்துள்ளதுடன், நுகர்வோர் மரக்கறிகளை வாங்குவதினை தவிர்த்துள்ளனர்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில காலமாக மேற்கூரை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை எனவும், எனவே இவ்விடயம் தொடர்பில் பொறுப்பானவர்கள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...