35 3
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் : பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

Share

சேதமடைந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் : பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் இன்று (21) மழையினால் கெட்டுப்போய் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் மரக்கறிகளை பாதுகாக்க கூரை இல்லாததே இதற்குக் காரணம் என சுனில் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மஹாவலி எச் பிராந்தியத்தில் இருந்து நொச்சியாகம, ராஜாங்கனை, விளச்சிய, மெதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து பெருமளவான விவசாயிகள் இன்று (21ஆம் திகதி) தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்தனர்.

அந்த மரக்கறிகளை பாதுகாப்பாக வைக்க கூரை இல்லாத காரணத்தினால் வியாபாரிகள் மரக்கறிகளை வாங்குவதை தவிர்த்துள்ளனர்.

இதன்போது காலையில் இருந்து பெய்த மழையில் மரக்கறிகள் சேதமடைந்துள்ளதுடன், நுகர்வோர் மரக்கறிகளை வாங்குவதினை தவிர்த்துள்ளனர்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில காலமாக மேற்கூரை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை எனவும், எனவே இவ்விடயம் தொடர்பில் பொறுப்பானவர்கள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...