34 4
இலங்கைசெய்திகள்

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்

Share

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை கைதுசெய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட பொருட்களுடன் வெளியேற முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் மருத்துவர் தடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் அங்காடியின் நிர்வாகத்திடம் அழைத்துச்செல்லப்பட்டு சோதனையிடப்பட்டபோது, அவரது பையில் இருந்து பணம் செலுத்தப்படாத சொக்லேட்டுகள், ஒரு பால் பவுடர் டின் மற்றும் சொசேஜ் என்பன மீட்கப்பட்டன.

இந்தநிலையில் அவர் ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பொருட்களை திருடிய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மருத்துவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 200,000 சரீரப்பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...