4 35 scaled
இலங்கை

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

Share

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறியவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை இல்லதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய பொருளாதாரம், சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும்.செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் யாரிடமும் பழிவாங்கப் போவதில்லை என்பதுடன் களவாடப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

26 6978f30ec21fc
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் மௌனத்தின் குரலாக இருந்தவர்: மறைந்த மனித உரிமைப் போராளி ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த. முத்துக்குமாரசாமிக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு, வவுனியாவில்...

UTV 59 960x540 1 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: விருந்துபசாரத்தின் போது தாக்குதல் – காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

26 6978aed5d377a
செய்திகள்அரசியல்இலங்கை

2015-ல் ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் ஐ.தே.க பணம் கொடுத்தது: ராஜித சேனாரத்ன அதிரடித் தகவல்!

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும்...